Pocket Novel, உங்கள் எழுத்துப் பயணத்திற்கான திறவுகோல்!

எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், எத்தனை சம்பளம் வாங்கினாலும், நம் மனதிற்கு நெருக்கமான நாம் விரும்பிச் செய்யும் வேலையில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் கிடைப்பதில்லை. பெரும்பாலானவர்களுக்கு அப்படி அவர்கள் விரும்பும் வேலை கிடைப்பதில்லை. தாங்கள் விரும்பிச் செய்யக் கூடிய செயலைச் செய்யும் சூழலும் அமைவதில்லை. போதிய வருமானம் இல்லாமலோ அல்லது நேரம் இல்லாமலோ மிகவும் விரும்பியும் செய்யமுடியாமல் தவிர்ப்பவைகளில் எழுத்தும் ஒன்று.

எல்லோருக்குமே எல்லோரிடமும் சொல்வதற்கு ஏதோ ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது. அதனைச் சொல்வதற்கான நேரமும், வழிகாட்டலும் இல்லாமல் போவதால் அந்தக் கதைகள் எல்லாம் சென்று சேர வேண்டிய இடத்திற்குச் செல்லாமல் தயங்கியபடியே தங்கிவிடுகின்றன. அப்படித் தங்கிவிடாமல் சிறந்த கதை சொல்லிகளை அடையாளம் கண்டு உலகிற்கு அறிமுகம் செய்யவே பாக்கெட் நாவல் தளத்தை உருவாக்கியிருக்கிறோம்.

பாக்கெட் நாவல் தளத்தில் உங்களது முதல் நாவலை எழுதத் துவங்குங்கள். உங்களது எழுத்துக்கள் லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்று சேர்வதுடன் பணமும் சம்பாதிக்க முடியும். எழுத்தின் மூலமாகப் பணம் ஈட்ட பிரபல எழுத்தாளராக இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

புதிதாக நாவல் எழுதுவது குறித்து உங்களுக்குச் சில குழப்பங்களும் சந்தேகங்களும் இருக்கலாம். உங்களது சந்தேகங்களை உடனடியாகத் தீர்த்து வைத்து உங்களுக்கு உதவ பாக்கெட் நாவல் குழு எப்போதும் தயாராகவே உள்ளது.

நாவல் எழுதுவதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும்!

பாக்கெட் நாவல் தளத்தில் நாங்கள் எழுத்தாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ரைட்டர்ஸ் பெனிஃபிட் ப்ரோகிராம் (WBP) என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறோம். இந்தத் திட்டத்தின் மூலமாக உங்களால் நிலையான மாத வருமானத்தை ஈட்ட முடியும். 

WBP பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்!

உங்களது கதைகள் வாசகர்களுக்குப் பிடித்த கதையாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் விரும்பினால் WBP திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். அதன் மூலமாக உங்கள் நாவல் முதல் 30,000 சொற்களைக் கடந்தவுடன் 3000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து அந்த நாவல் மேலும் மேலும் ஒவ்வொரு மாதமும் 50,000 சொற்களை எழுதும் போது மாதம் 6,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும். இவற்றைத் தவிர சிறப்புப் பரிசுகளும், ஊக்கத் தொகைகளும் வழங்கப்படும்.

வருமானத்தைத் தவிரவும் வேறென்ன கிடைக்கும்?

ஓர் எழுத்தாளர் பெரிதும் விரும்புவது தங்களது கதைகள் மிக அதிக வாசகப்பரப்பைச் சென்று சேர வேண்டும் என்பதைத் தான். பாக்கெட் நாவல் தளம் நிச்சயமாக அதற்குத் துணையாக இருக்கும். பாக்கெட் நாவல் தளத்தில் அதிகப்படியான வாசகர்களைக் கவரும் நாவல்கள் இந்தியாவின் நம்பர் ஒன் ஆடியோ தளமான PocketFM தளத்தில் ஆடியோ புத்தகமாக வெளியிடப்படும். அதன் மூலமாக உங்களது கதைகள் ஐந்து கோடிக்கும் அதிகமான வாசகர்களைச் சென்று சேரும் வாய்ப்பும் இருக்கிறது.

புதிய எழுத்தாளர்களுக்கு பாக்கெட் நாவல் தளம் எவ்வாறு உதவுகிறது?

”இதுவரையிலும் கதைகள் படித்துக் கொண்டிருந்தேன்; எழுதியதில்லை. ஆனால், பாக்கெட் நாவல் தளத்தில் எழுத விரும்புகிறேன். இதற்கு ஏதேனும் உதவி கிடைக்குமா?” என்ற கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். தயங்காமல் எழுதத் துவங்குங்கள். பாக்கெட் நாவல் ஆசிரியர் குழு உங்களது கதைகளில் இருக்கும் பிழைகளைச் சரி செய்ய உதவுவார்கள். தவிர, தொடர்ச்சியாக எப்படி எழுதுவது என்ற ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.

பாக்கெட் நாவல் தளத்தில் எழுத கம்ப்யூட்டர்/லேப்டாப் வேண்டுமா?

நன்றாக எழுதத் தெரிந்தாலும் சிலர் எழுத்தைக் கைவிடுவதற்குக் காரணம் எழுதுவதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க முடியாமைதான். தவிர, கம்ப்யூட்டரோ லேப்டாப்போ இல்லாமையாலும் பெரும்பாலும் எழுதுவதற்கு சிரமப்படுகிறார்கள். பாக்கெட் நாவலில் எழுத உங்களிடம் கம்ப்யூட்டர் இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. மொபைலிலேயே நேரடியாக பாக்கெட் நாவல் செயலியின் மூலமாக எழுத முடியும். இதன் மூலமாக எழுதுவதற்கென்று நீங்கள் தனியாக ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து விரல்களுடன் ஆறாம் விரலாக எப்போதும் இருக்கும் மொபையில் பேருந்தில் பயணிக்கும் போதோ, யாருக்கேனும் காத்திருக்கும் போதோ கூட நாவல்களை எழுத முடியும். தொடர்ச்சியாக தினமும் ஆயிரம் சொற்களை எழுதுவதன் மூலமாக உங்களது எழுத்துப் பயணத்தைப் ரயில் பயணங்களில் கூடத் தொடர முடியும்.

மனதிற்குப் பிடித்த செயலைச் செய்யும் போது தான் நமக்காக வாழ்கிறோம். எழுதுவது உங்கள் மனதிற்குப் பிடித்த செயலென்றால் பாக்கெட் நாவல் உங்களுக்கான நீங்கள் வாழும் நாட்களை எளிதாக மீட்டுத் தரும் என்பதற்கான உறுதியைத் தருகிறோம். உங்கள் மனம் விரும்பும் நாவலைப் பாக்கெட் நாவலில் எழுதுவதன் மூலமாக வருடத்திற்குப் பத்து லட்சம் வரையிலும் வருமானம் ஈட்டலாம் என்பது கரும்பு தின்னக் கூலி கொடுக்கும் வேலையின் நவீன வடிவம்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *